உடை, உணவு, தண்ணீர் இல்லாமல் அடைத்து வைத்து கொடுமை படுத்துகின்றனர்.. காதல் திருமணம் செய்த பெண் கணவர் வீட்டு முன் தர்ணா.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருவெற்றியூர் காலடிபேட்டை மார்க்கெட் பகுதியை சார்ந்தவர் கிரிஷ்ணபிரசாத் (வயது 25). இவர் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சார்ந்தவர் பரமேஸ்வரி (வயது 21). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த 2017 ஆம் வருடத்தில் திருமணம் செய்து கொண்டு தனிகுடித்தனத்தில் வசித்து வந்துள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக பரமேஸ்வரி கோபமடைந்து தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். 

இதன்பின்னர் சமாதானம் அடைந்து கணவருடன் வாழ வீட்டிற்கு திரும்பிய நிலையில், உனது நடந்தை சரியில்லை என்று கூறி கிரிஷ்ணப்ரசாத் உடன் வாழ மறுத்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் போயுள்ளது. 

இதற்கு பின்னர், அங்குள்ள திருவெற்றியூர் காவல் நிலையத்திற்கு முன்னதாக தீக்குளிக்க முயற்சி செய்து பரமேஸ்வரி ஈடுபடவே, கணவன் - மனைவியை மீண்டும் அழைத்து காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதன் பின்னர் இருவரும் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், மீண்டும் தகராறு வெடித்துள்ளது. 

இந்த நேரத்தில், பரமேஸ்வரி தனது கணவரின் வீட்டிற்கு முன்னதாக தர்ணாவில் ஈடுபட்டார். மேலும், தனது கணவரின் குடும்பத்தினர் தன்னை அடித்து கொடுமை செய்கின்றனர் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான தகவலை அறிந்த திருவெற்றியூர் காவல் துறையினர் சமாதானம் பேசி, நான்கு மணிநேரத்திற்கு பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

காவல் நிலையத்தில் பரமேஸ்வரி தனது கணவரின் இல்லாதார் தன்னை கொடுமைபடுத்துவதாகவும், இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் அவதியுற்று வருவதாகவும், கடந்த வாரத்தின் போது தன்னை வீட்டில் வைத்து அடைத்துவிட்டு குடும்பத்துடன் கேரளாவிற்கு சென்றுவிட்டனர், நான் உணவு குடிநீர் இல்லாமல் தவித்து வந்த நிலையில், முதல் மாடியின் வழியாக வீட்டை விட்டு வெளியேறினேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai love marriage girl torture by husband family


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->