சாலையில் வழக்கம்போல நடந்த வந்த பெண்., திடீரென மயங்கி விழுந்த சோகம்.! காத்திருந்த பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பலர் பரிதாபமாக தற்கொலை செய்துகொள்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில். மனநலம் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் உள்ள போரூர் ஐயப்பன்தாங்கல் அருகேயுள்ள சீனிவாசபுரம் கஜலட்சுமி பகுதியை சார்ந்தவர் யசோதா (வயது 60). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

poison,

இந்த நிலையில்., நேற்று முன்தினத்தன்று மாலையில் அருகில் இருக்கும் கடைக்கு சென்ற நிலையில்., மீண்டும் இல்லத்திற்கு வராமல் இருந்துள்ளார். இந்த சமயத்தில்., யசோதா அங்குள்ள பகுதியில் ஆசிட் குடித்து மயக்கடைந்த நிலையில் கிடந்துள்ளார். 

இதனையடுத்து இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்., யசோதாவின் மகளிற்கு தகவல் தெரிவித்த பின்னர்., போரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிருக்கு போராடியவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கிய நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai lady attempt suicide police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->