காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சோகம்.! தற்கொலை செய்துகொண்ட கன்னியாகுமரி மாணவர்.!!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள காட்டாங்குளத்தூர் பகுதியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவனராக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் தற்போதைய எம்.பி.பச்சமுத்து கல்லூரியின் நிறுவனராக இருக்கிறார். இந்த கல்லூரியில் மருத்துவம் முதல் பொறியியல் துறை வரை உள்ள பல்வேறு வகையான படிப்புகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. 

srm owner, srm insitute owner, srm college chennai,

இந்த கல்லூரியில் அதிகளவு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சார்ந்தவர்கள் படித்து வரும் நிலையில்., இந்த கல்லூரியின் கட்டண தொகையை வைத்து பார்க்கும் சமயத்தில் அதிகளவு பணக்கார வீடுகளில் இருக்கும் பிள்ளைகள் பயின்று வருகின்றனர். இவர்கள் தங்கி படிக்கும் வகையில் இந்த நிறுவனத்திற்கு விடுதியமைப்பும் உள்ளது. இந்த கல்லூரியில் அடிக்கடி மாணவ - மாணவியர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாகியுள்ளது. 

கடந்த மாதத்தின் போது பிடெக் பயிலும் அனுப்பிரியா என்ற மாணவி., கல்லூரி கட்டிடத்தின் 10 ஆவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில்., அடுத்தபடியாக ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த அனுஷ் சவுத்திரி என்ற மாணவரும் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில்., மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. 

attempt suicide, suicide, murder, died,

கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த ராகவன் என்ற மாணவர் ஐடி நான்காம் வருடம் படித்து வரும் நிலையில்., சனி மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறை முடிந்து திரும்பியதும் திடீரென 15 ஆவது மாடியில் இருந்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவமானது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இது போன்ற துயரங்கள் அந்த கல்லூரியில் தொடர்ந்து நடைபெற்று வருவது தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் தற்கொலைக்கு உரிய காரணத்தை கண்டறிந்து இந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai kattangulathur srm college student attempt suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->