ஆட்டோவில் மொபைல் கஞ்சா சர்விஸ்.! கைதான கும்பலின் பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில்., தனிப்படை காவல்துறையினர் நேற்று இரவு நேரத்தில் வண்ணாரப்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சமயத்தில்., இப்பகுதி வழியாக ஆட்டோ ஒன்று அங்கும் - இங்குமாக ஒரே நேரத்தில் மாறி மாறி சுற்றி வந்துள்ளது. இதனையடுத்து இதனை கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர் ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நேரத்தில்., ஆட்டோவில் இருந்த டிரைவர் உட்பட 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனைத்தொடர்ந்து ஆட்டோவில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதை அடுத்து., சுமார் 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். 

kanja, kanja images,

மேலும்., 100 கிராம் பொட்டலங்கள் அளவில் 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில்., திருவொற்றியூரை சார்ந்த ராஜா (வயது 29)., புளியந்தோப்பு பகுதியை சார்ந்த சுதாகர் (வயது 27)., மணலியை சார்ந்த கருப்பு உதயா (வயது 29) என்பது தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது இவர்கள் ஆட்டோவில் கஞ்சாவை வைத்து வாடிக்கையாளர்களுக்கு அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு., வாடிக்கையாளர் சேவை மையம் போல பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பான தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai kanja gang arrested by police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->