கள்ளக்காதலி குடும்பத்தோடு காசு கேட்டு அடாவடி... வெறித்தனத்தில் சூறையாடிய கள்ளக்காதலன்..!!
in chennai illegal affair murder attempt police investigation
சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை அம்பேத்கார் நகர் பகுதியை சார்ந்தவர் சந்திரசேகர். இவர் சொந்தமாக வேன் வைத்து பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் யுவராணி. இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், யுவராணி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் செங்கல்பட்டில் இருக்கும் பெற்றோரின் இல்லத்தில் தங்கியிருந்து வந்துள்ளார்.
சந்திரசேகர் தனது இல்லத்தில் தனியாக வசித்து வந்த நிலையில், இப்பகுதியை சார்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் தனலட்சுமி என்ற பெண்மணிக்கும் - சந்திரசேகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும், தனலட்சுமியின் நடவடிக்கையில் திடீரென மாற்றம் ஏற்பட்டதால் அவருடன் பழகுவதை சந்திரசேகர் நிறுத்தியுள்ளார்.
இருப்பினும் தனலட்சுமி அவ்வப்போது பணம் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார். இதற்கு தனலட்சுமியுடைய தாயார் ரத்னாவதி (வயது 60) மற்றும் அவரது 17 வயது மகள் உடந்தையாக இருந்த நிலையில், சந்திரசேகர் மற்றும் தனலட்சுமிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் தனலட்சுமி மற்றும் அவரது தாயார் ரத்னாவதி, அவரது மகள் ஆகியோர் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு ரகளையில் ஈடுபடவே, சந்திரசேகரின் வேனின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சந்திரசேகர் கத்தியை அடுத்து இவர்கள் மூவரையும் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்து இருந்த மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai illegal affair murder attempt police investigation