கள்ளக்காதல் மோகம்... கண்டித்த மனைவியை கொன்று தூக்கிய கொடூர கணவன்.. சென்னையில் பகீர்..!!
in chennai illegal affair husband killed wife
சென்னையில் உள்ள மதுரவாயல் கண்ணியப்ப முதலித்தெரு பகுதியை சார்ந்தவர் ஜெயவேல் (வயது 38). இவருக்கு சொந்தமாக லோடு ஆட்டோ இருக்கும் நிலையில், இவரது மனைவியின் பெயர் திலகம் (வயது 36). இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் சஞ்சய் என்ற 12 வயது மகனும், ஜனனி என்ற 11 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில், குடும்ப தகராறால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல் துறையினருக்கு ஜெயவேல் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், திலகத்தின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டு இருப்பதையும், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளம் இல்லாததையும் கண்டு சந்தேகமடைந்தனர்.
மேலும், இவரது முகத்தில் காயம் இருந்துள்ளது. இதன்பின்னர் திலகத்தின் உடலை கைப்பற்றி அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், சதேகத்தின் கீழ் ஜெயவேலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில், தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான வாக்குமூலத்தில், லோடு ஆட்டோ இயக்கி வந்த எனக்கும், மற்றொரு பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இந்த பெண்ணின் பெயர் தனது ஆட்டோவில் உள்ளது. எங்களின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த மனைவி திலகம் என்னை அவ்வப்போது கண்டித்து வந்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்றும் இதனைப்போன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நான் மனைவியை சரமாரியாக அடித்து, தலையணையை வைத்து முகத்தில் அமுக்கிய பின்னர், துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனை மறைக்க தூக்கு போட்டு தற்கொலை நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜெயவேலை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai illegal affair husband killed wife