அவளின் முதல் கணவன் குழந்தை எனக்கு பிடிக்கவில்லை.. கொலை செய்தேன்..! கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்.!!
in chennai illegal affair girl son killed by illegal affair boy police investigation
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சார்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவியின் பெயர் கங்கா (வயது 28). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவர்கள் இருவருக்கும் வரலட்சுமி (வயது 5) என்ற பெண் குழந்தையும்., அருண் (வயது 3) என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக சத்தியமூர்த்தி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்., இவரது பக்கத்து வீட்டினை சார்ந்த கட்டிட மேஸ்திரியான வெங்கடேசன் (வயது 35) என்பவருடன் - கங்காவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரே இல்லத்தில் வசிக்க துவங்கினர். மேலும்., தனது மகளை கேரளாவில் உள்ள தனது தங்கையின் இல்லத்தில் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில்., கங்கா தனது கள்ளக்காதலன் வெங்கடேசன் மற்றும் கங்காவின் மகன் அருணுடன் 5 மாதங்களுக்கு முன்னதாக மேடவாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த சமயத்தில்., கங்கா தனது மகளை பார்ப்பதற்கு கேரளாவிற்கு சென்றுள்ள நேரத்தில்., மகனை வெங்கடேசனின் பொறுப்பில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மயங்கி விழுந்துள்ள நிலையில்., சிறுவனை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில்., இது குறித்து கங்காவிற்கு அலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சென்னைக்கு கங்கா புறப்பட்டுள்ளார்.
சிறுவன் குறித்து மருத்துவர்கள் வெங்கடேசனிடம் விசாரணை மேற்கொண்ட சமயத்தில் எவ்விதமான பதிலும் தெரிவிக்காமல் தப்பி சென்ற நிலையில்., கங்கா தனது குழந்தையை கண்டு கதறியழுதுள்ளார். பின்னர் கங்கா - வெங்கடேசனிற்கு அலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட நிலையில்., அவரின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக சந்தேகித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து., தலைமறைவாக இருந்த வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பகீர் தகவல் வெளிவந்துள்ளது.
இது தொடர்பான வாக்குமூலத்தில்., கங்காவின் முதல் கணவனருக்கு பிறந்த குழந்தையின் மீது துவக்கத்தில் இருந்தே ஆத்திரம் இருந்து வந்தது. எங்களது உல்லாச வாழ்க்கைக்கும் குழந்தை இடையூறாக இருந்த நிலையில்., சம்பவத்தன்று மது போதையில் நான் இருந்தேன். குழந்தைக்கு சிகிரெடால் சூடு வைத்து குழந்தையை எட்டி உதைத்தேன். இதனால் குழந்தை தரையில் மோதி உயிரிழந்தது என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai illegal affair girl son killed by illegal affair boy police investigation