இரவில் தூங்கி எழுந்த மகனின் அருகே பிணமாக இருந்த தாயார்..! உத்திரத்தில் தொங்கிய தந்தை...!! அலறிய சிறுவன்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவரின் பெயர் நரேஷ். அதே பகுதியை சார்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. 

இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நாட்களில் இருந்தே சண்டையும் - சச்சரவும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்., காலத்தின் போக்கில் இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறந்த நிலையில்., இந்த தற்போது குழந்தைக்கு 7 வயது ஆகிறது. 

husband wife fight, husband wife torture, கணவன் மனைவி சண்டை, கணவன் மனைவி தகராறு,

இந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டு இருப்பதால்., சண்டை ஏற்பட்ட பின்னர் தனது அண்ணனின் இல்லத்திற்கு சென்று வரும் வழக்கத்தை வைத்துள்ளார். பின்னர் மனைவியை வீட்டிற்கு சென்று சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். 

வீட்டிற்கு அழைத்து வந்து மதுவும் அருந்தி மீண்டும் சண்டையிடும் வழக்கத்தை வைத்திருந்த நிலையில்., நேற்றும் வழக்கம்போல சண்டையிட்டு சென்ற மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து மது அருந்தியுள்ளார். 

கொலை, குற்றம், தற்கொலை, suicide attempt, killed, murder, died,

இதற்குப்பின் இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் காரணமாக ஆத்திரமடைந்த நரேஷ் மனைவியை கொலை செய்து., தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். காலையில் சிறுவன் எழுந்ததும் தாய் - தந்தை பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினான். 

சிறுவனின் அலறல் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்ததை அடுத்து., இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியாகி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai husband killed wife and attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->