கணவனை காண விண்ணுலக பயணத்தை தேர்ந்தெடுத்த பாசக்கார மனைவி..! அடுத்தடுத்த நாளில் பெரும் சோகம்.!!
In Chennai husband died wife attempt suicide
தமிழகத்தில் சென்னையை அடுத்துள்ள படப்பை சர்ப்பணஞ்சேரி பகுதியை சார்ந்தவர் பாலாஜி என்கிற சோனு (வயது 22). இவர் ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில்., இவரது மனைவியின் பெயர் ரிஷிதா (வயது 20).
இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகும் நிலையில்., நேற்று முன்தினத்தன்று பாலாஜி தனது இரு சக்கர வாகனத்தில் படப்பையை நோக்கி சென்று கொண்டு இருந்த சமயத்தில்., அங்குள்ள வெள்ளரித்தாங்கல் பகுதியில் பின்னால் வந்த லாரியானது மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
லாரி மோதிய வேகத்தில்., வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., இந்த தகவலை அறிந்த மணிமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாலாஜியின் உடலை மீட்டனர்.
பாலாஜியின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தருணத்தில்., நேற்று காலையில் இருந்து ரிஷிதா வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்த நிலையில்., சந்தேகமடைந்த உறவினர்கள் அவரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில்., ரிஷிதா பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறியழுததை அடுத்து., கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்து வந்த ரிஷிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
In Chennai husband died wife attempt suicide