தோழியின் கள்ளக்காதலுக்கு கடத்தல் வேஷம்.. சாயம் வெளுத்து காவல் நிலையத்தில் கதறல்.!!
in chennai girl try to kidnap in guindy station due to illegal affair helps
சென்னையில் உள்ள கிண்டி வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சார்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவியின் பெயர் சுபாஷினி (வயது 42). இவர் இரயில்வே ஊழியராக பணியாற்றி வரும் நிலையில்., மாம்பலம் இரயில்வே நிலையத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் கிண்டி இரயில் நிலையத்தில் இருந்து மாம்பலம் இரயில் நிலையத்திற்கு செல்லும் நிலையில்., இன்று வழக்கம் போல கிண்டியில் காத்துகொண்டு இருந்துள்ளார். இந்த நேரத்தில்., அங்கு வந்த பெண்ணொருவர் தன்னை பெண் காவல் அதிகாரி என்று அறிமுகம் செய்துள்ளார்.
மேலும்., இவருடன் வந்த இரண்டு ஆண் நபர்கள் காவல் அதிகாரிகள் என்று கூறி., பெண் காவல் அதிகாரி என்று கூறியவர் முகத்தை துணியால் மறைத்துள்ளார். சுபாஷினியின் மீது புகார் உள்ளதாகவும்., பெரம்பூர் காவல் துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாது காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் பிற அதிகாரிகள் காரில் உள்ளதாகவும்., தங்களுடன் வருமாறும் கூறியுள்ளார். காவல் அதிகாரி என்று கூறிய பெண் சுபாஷினியின் கையை பிடித்து இழுக்கவே., பதற்றமடைந்த சுபாஷினி வர மறுப்பு தெரிவித்து அலறியுள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த இரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரையவே., காவல்துறையினர் வருவதற்குள் பெண் தப்பி ஓடியுள்ளார். இவருடன் வந்த போலி காவல் அதிகாரிகள் இரண்டு பேர் மாட்டிக்கொண்டனர். அதிரடியாக இரயில்வே நிலையத்தில் வைத்தே மேற்கொண்ட விசாரணையில்., காரில் இருக்கும் கும்பலை மடக்கி பிடித்தனர். இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., காவல் அதிகாரி என்று கூறிய பெண்ணின் பெயர் வதனி என்பது தெரியவந்துள்ளது.
இதனைப்போலவே உடன் வந்த வியாசர்பாடியை சார்ந்த ஜீவானந்தம் மற்றும் பாலகுரு என்பதும் தெரியவந்ததை அடுத்து., இவர்களுடன் காரில் முத்துலட்சுமி., வதனி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் இருந்துள்ளனர். இந்த விசாரணையின் முதற்கட்ட தகவலில் பணம் பறிக்க சுபாஷினியை கடத்த முயற்சித்ததாக தெரிவித்த நிலையில்., தற்போது விசாரணையின் உண்மையான காரணம் கள்ளக்காதல் பஞ்சாயத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும்., மாம்பலம் இரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் கிஷோர் என்பவருக்கும்., வதனிக்கும் இடையே முறையற்ற பழக்கம் இருந்துள்ளது.
திருமணம் முடிந்த வதனிக்கும் - கிஷோருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கசக்கவே., மற்றொரு ஊழியராக இருந்து வந்த சுபாஷிணியுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாதனை., தனது தோழியான முத்துலெட்சுமியிடம் இது குறித்து தெரிவித்து உதவி கூறியுள்ளார். முத்துலட்சுமி பாடியில் அழகு நிலையம் வைத்துள்ள நிலையில்., தோழிக்கு உதவி செய்யும் பொருட்டு காவல் அதிகாரி வேடமிட்டு வந்துள்ளார். பின்னர் இரயில் நிலையத்திற்கு அதிரடியாக விரைந்த போலி காவல் அதிகாரிகள் சுபாஷினியை வலுக்கட்டாயமாக இழுத்ததால் கூச்சலிட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நேரத்தில் இவர்கள் வந்த வாகனம் வாடகை கார் என்றும்., காரை பெண்கள் எடுத்து தப்பி செல்லவே., காரின் ஓட்டுநர் பரிதாபமாக சிக்கிக்கொண்டார். பின்னர் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில்., இரண்டு பெண்கள் உட்பட ஒரு ஆணை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai girl try to kidnap in guindy station due to illegal affair helps