தனியாக செல்லும் பெண்களிடம் அத்துமீறிய கொடூரன்.. அடித்து நொறுக்கிய பொதுமக்கள்.. சென்னையில் தரமான சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தலைக்கவசம் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகளவு நடந்து வந்தது. 

சென்னையில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வரும் இளைஞன் ஒருவன், சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களை குறிவைத்து, அவர்களின் பின்பகுதியை தட்டி செல்வதை வழக்கமாக வைத்துள்ளான். 

இவனது கீழ்த்தரமான செயலால் பாதிக்கப்படும் பெண்கள் அபயக்குரல் எழுப்புவதற்குள், காம இச்சை கொண்ட இளைஞன் அங்கிருந்து சென்றுவிடுவதாக மறைமுக குற்றசாட்டுகள் தொடர்ந்து எழுந்தது. 

இந்த நிலையில், இதே செயலில் ஈடுபட்ட கொடூரன் சிக்கும் காலமாக, சுதாரித்துக்கொண்ட பெண்மணி கொடூரனை பிடித்து சத்தமிட்டுள்ளார். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் நையப்புடைத்துள்ளனர். 

பின்னர் இவனை அங்குள்ள பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினரிடம் ஒப்படைக்கவே, கொடூரனிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சார்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது. 

மேலும், இவன் கம்ப்யூட்டர் என்ஜினியராக இருந்து வரும் நிலையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், இவனுக்கு திருமணம் முடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. நங்கநல்லுர் மற்றும் மடிப்பாக்கம் பகுதி வழியாக இவன் செல்லும் போது கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் ஆகியோரிடம் அத்துமீறியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai girl sexual torture culprit attacked by public and police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->