இரண்டாம் மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன்..! கதறியழுத சிறுமி., கலங்கிப்போன தாயார்..!!
in Chennai girl sexual harassment by her mother second husband
நாம் வாழும் உலகில் பல விதமான பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில்., பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளை நாம் அறியும் சமயத்தில்., நமக்கே அறியாத ஆத்திரமும்., காம கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து அதிகரிக்கும். சட்டங்கள் கடுமையாகும் பட்சத்தில் மட்டுமே., பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனையில் இருந்து அவர்களை காக்க இயலும்.
சென்னை போரூருக்கு அருகேயுள்ள வளசரவாக்கம் ஆறுமுக நாவலர் தெருவில் வசித்து வரு சிறுமியின் பெயர் கவிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவரின் 15 வயதுடைய மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கவிதாவின் கணவர் திருமணம் முடிந்த சில வருடத்திலேயே மனைவியை பிரிந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து தனது குழந்தையை வளர்ப்பதற்கு அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி குழந்தையை வளர்ந்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., கவிதாவுக்கும் - அதே பகுதியை சார்ந்த பாலசுப்பிரமணியன் என்பவனுக்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியின் தனது மனைவியை பிரிந்து., தன் மகனுடன் வசித்து வந்துள்ளான்.
Tamil online news Today News in Tamil
இந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் நட்பானது அதிகரித்து., இருவரும் திருமணம் செய்து வாழ முடிவு செய்து., கடந்த 2013 ஆம் வருடத்தின் போது திருமணம் செய்துள்ளனர். இவர்களின் வாழக்கை நன்றாக சென்று கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு இருந்த நிலையில்., கவிதா பணிக்கு சென்றவுடன்., கவிதாவின் மகளுக்கு பாலசுப்பிரமணியன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.
இந்த விஷயம் குறித்து தனது தாயாரிடம் மகள் கூறி கதறியளவே., இதனை கேட்டு ஆத்திரமடைந்த நிலையில் இருவரும் சண்டையிட்டுள்ளனர். இந்த சண்டைக்கு பின்னர் கவிதா தனது இல்லத்தில் இருந்து வெளியேறி., அங்குள்ள எம்.ஜி.ஆர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகின்றனர். தனது மகளுக்கு நடந்த அநீதியை அறிந்து ஆத்திரத்தில் இருந்த கவிதா இது குறித்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல அதிகாரிகள்., இது குறித்து வடபழனி மகளீர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்டு பாலசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai girl sexual harassment by her mother second husband