நாடக காதல்.. கம்மலை அடகு வைத்து வாடகைக்கு வீடு.. பாலியல் வன்கொடுமை..! கதறும் 17 வயது சிறுமியின் பெண்ணின் பெற்றோர்..!!
In chennai girl sexual harassment by drama lover
தமிழகத்தில் உள்ள சென்னை ஆவடியை அடுத்துள்ள ஆரிக்கம்பேடு அமிர்தாபுரம் பகுதியை சார்ந்தவர் குருபிரசாத் (வயது 19). இவன் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளர்.
இவர் அங்குள்ள பாரிமுனை தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., மாணவிக்கும் - குருபிரசாத்திற்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நட்பில் இருந்து நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., கடந்த 30 ஆம் தேதியன்று குருபிரசாத்., மாணவியை அங்குள்ள வியாசர்பாடிக்கு லழைத்து சென்று., அவர் காதில் அணிந்திருந்த கம்மலை அடகு வைத்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இதனையடுத்து அன்றிரவே திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான். மாணவியை காணாது தேடியலைந்த பெற்றோர் மகளை காணாது., அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததை அடுத்து., சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து காம கொடூரன் குருபிரசாத்தை காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
In chennai girl sexual harassment by drama lover