16 வயது சிறுமியை கடத்தி ஐந்து நாட்களாக கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த கொடூரம்.! சென்னையில் மீண்டும் அதிபயங்கரம்.!!
in Chennai girl rapped by gang police investigation going on
இவ்வுலகத்தில் பல விதமான பிரச்சனைகள் நடந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் பிரச்சனைகளில் பெரும் பிரச்சனையாக பெண்களுக்கு நடக்கும் கொடூரங்கள் இருந்து வருகிறது. நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் மாற்றப்படும் பட்சத்திலேயே இதனை தவிர்க்க இயலும்.
சென்னையில் உள்ள புளியந்தோப்பில் பெற்றோருடன் வசித்து வரும் 16 வயதுடைய சிறுமி பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த மூன்றாம் தேதி இவர் புரசைவாக்கத்தில் இருக்கும் நிஷா என்பவரின் இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி என்றும் பாராது வீட்டிற்குள் வந்த 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான்கள். இதுமட்டுமல்லாது கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து சிறுமியை சீரழித்து வந்துள்ளான்கள்.
இந்த நிலையில்., இவன்களது பிடியில் இருந்து தப்பிய சிறுமி தனது வீட்டிற்கு வந்து தனக்கு நடந்ததை கூறி பெற்றோரிடம் கதறியழுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் புளியந்தோப்பில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சபீனா., நிஷா மற்றும் முபீனா ஆகியோரை கைது செய்த நிலையில்., இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில்., சிறுமி வீட்டில் இருந்து சண்டையிட்டு வந்ததை அறிந்து., வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியை சீரழித்த கொடூரன்கள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்., மூன்று பேரின் அடையாளத்தை தெரிவித்துள்ளதாகவும்., அந்த மூவரை காவல் துறையினர் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
in Chennai girl rapped by gang police investigation going on