சிறுமியை நாடக காதலால் ஏமாற்றி., வீட்டில் அடைத்து வைத்து சீரழித்த காமுகன்.! விசாரணையில் பகீர் தகவல்.!!
in chennai girl rapped by drama lover police investigation and arrest culprit
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களை குறைப்பதற்கு சட்டங்கள் கடுமையாகும் பட்சத்திலேயே., பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சார்ந்த சதீஷ்குமார் (வயது 24) என்பவன்., சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியில் இருக்கும் எம்.ஜி.ஆர். நகரில் தங்கியிருந்து இயந்திரம் பழுது பார்க்கும் தொழிலை செய்து வந்துள்ளான்.
அங்குள்ள வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த சிறுமி., அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பில் பயின்று வருகிறார். இவரிடம் சதீஷ்குமார் பழகி வந்த நிலையில்., நாடக காதலால் ஏமாற்றி வந்துள்ளான். இவரது நாடக காதலில் விழுந்த மாணவியும் - சதீஷும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த தருணத்தில்., கடந்த 30 ஆம் தேதியன்று பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல்., தனது ஊருக்கு அழைத்து சென்றுள்ளான். மகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த சமயத்தில்., இவர்களின் காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்களின் இருப்பிடத்தை அறிந்த காவல் துறையினர்., திருவண்ணாமலைக்கு சென்று சிறுமியை மீட்டு வந்தனர்.
சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில்., சிறுமியை அழைத்து சென்ற காம கொடூரன்., சிறுமியை தினமும் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை காப்பகத்தில் தங்க வைத்த நிலையில்., மாணவியின் வாழ்க்கையை சீரழித்த நாடக காதலன் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai girl rapped by drama lover police investigation and arrest culprit