வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையை இழக்கும் சிறுமிகள்.. அடுத்தடுத்து சென்னையில் அரங்கேறும் சோகங்கள்.!!
in Chennai girl rapped by drama love youngster police arrest
வீட்டில் உள்ள சின்ன சின்ன சண்டைகளுக்கு பெருமளவில் வாழ்க்கையே துளைந்தது போல் நினைத்து., இல்லத்தினை விட்டு வெளியேறும் மாணவிகளின் வாழ்க்கை சீரழித்து வரும் சோகம் சென்னை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சென்னை சோழிங்கநல்லூர் பள்ளி சிறுமிகள் இருவர்., கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அரங்கேறிய கொடூரம் என்று அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்., தற்போது இதனைப்போன்றதொரு துயரம் அரங்கேறியுள்ளது.
சென்னையில் உள்ள எழும்பூர் இரயில் நிலையத்தின் 4 ஆவது நடைமேடையில் இளைஞரொருரவர் சிறுமியுடன் நின்று கொண்டு இருந்துள்ளார். இதே பகுதியில் குழந்தைகள் தொண்டு நிறுவன அதிகாரிகள் நின்று கொண்டு இருக்கவே., இருவரின் செயல்பாடுகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களிடம் குழந்தைகள் தொண்டு நிறுவன அதிகாரிகள் என்பதை காட்டிக்கொள்ளாமல் பேச்சு கொடுத்த நிலையில் வாலிபரின் பெயர் அன்பழகன் (வயது 22) என்பதும்., இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் பலமலைநாதர் நகர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும்., சிறுமி சென்னையில் உள்ள பெருங்குடியை சார்ந்தவர் என்பதும்., அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த நிலையில்., இருவரும் காதலித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் தங்களின் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தெரியவந்ததை அடுத்து., இது குறித்து திருவெல்லிக்கேணி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மகளீர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பகீர் தகவல் வெளிவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையில்., சென்னையில் உள்ள மெரினா கடற்கரைப்பகுதியை சுற்றிப்பார்க்க வந்த சிறுமிக்கும்., அங்குள்ள உழைப்பாளர் சிலை அருகேயுள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வரும் அன்பழகனிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தை அடுத்து சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய கொடூரன்., காதல் வார்த்தைகள் கவிதைகள் என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளான். மேலும்., தான் உன்னையே திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று திருமண ஆசையை வளர்த்துவிட்டு., சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்டுள்ளான்..
காம கொடூரனின் எண்ணத்தை அறியாத சிறுமி மெரீனாவிற்கு வருகை தந்ததை அடுத்து., சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு., சொந்த ஒருக்கு அழைத்து சென்று திருமணம் செய்வதாக கூறி எழும்பூர் இரயில் நிலையத்திற்கு இரவு கடையை அடைத்துவிட்டு அழைத்து சென்றுள்ளான். மேலும்., திருமண ஆசையை காட்டி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கொடூரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai girl rapped by drama love youngster police arrest