திருமணமான ஆறுநாளில் தற்கொலை செய்த பெண் வழக்கில் திடீர் திருப்பம்..! நாடக காம காதலால் அரங்கேறிய சோகம்..!!
in Chennai girl killed by husband due to illegal affair
சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் அருகேயுள்ள திரிசூலம் பகுதியை சார்ந்தவன் அபின்ராஜ். இவன் மினி வேன் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில்., அதே பகுதியை சார்ந்த மனிஷா என்ற பெண்ணை ஐந்து வருடமாக காதலித்து வந்துள்ளான். இந்த நிலையில்., தனது காதலை வளர்க்கும் பொருட்டு., கடந்த வருடத்தின் துவக்கத்தில் மனிஷாவிடம் காதலை தெரிவித்து., திருமணம் செய்யவும் பேசியுள்ளேன்.
இதனையடுத்து மனிஷாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று திருமணம் செய்வதாக கூறிய நிலையில்., தனது உறவினரின் இல்லத்தில் தங்க வைத்து., மனிஷாவுடன் அபின்ராஜ் தங்கி வந்துள்ளான். தொடர்ந்து திருமணம் செய்யாமலும் இருந்து வந்துள்ளான். இந்த சமயத்தில்., இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த தருணத்தில்., இவர்கள் இருவரின் நெருக்கத்தின் காரணமாக மனிஷா கர்ப்பமான நிலையில்., வழியில்லாமல் உறவினரின் இல்லத்தில் இருந்து மனிஷாவை தனியாக வீடெடுத்து வசித்து வந்துள்ளான். இருந்தாலும்., இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மனிஷாவின் வயிற்றில் கொடூரன் பலமாக தாக்கியதால்., மனிஷாவின் கரு கலைந்துள்ளது.
இதனையடுத்து தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள கூறி மனிஷா வற்புறுத்தி வந்த நிலையில்., இதனை ஏற்ற அபின்ராஜ் கடந்த ஆகஸ்டு 25 ஆம் தேதியன்று., பெசன்ட் நகரில் தனது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளான். இதனையடுத்து இவர்கள் இருவரும் தனியாக வீடெடுத்து தங்கி வந்துள்ளனர்.
இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில்., திருமணம் முடிந்த ஆறாவது நாளிலேயே மனிஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் உடல் குரோம்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர்., இறுதி மரியாதைகள் நிறைவு பெற்று தகனமும் செய்யப்பட்டது. மேலும்., மனிஷாவின் இறப்பில் சந்தேகம் ஏதும் ஏற்படாமல்., மனிஷாவின் பெற்றோர்கள் இருந்து வந்துள்ளனர்.
இந்த தருணத்தில்., மனிஷாவின் அலைபேசியை உறவினரால் ஆய்வு செய்த சமயத்தில்., அதில் மனிஷா அவரது கணவரிடம் அழுதபடி பேசும் ஆடியோ ஒன்று இருந்துள்ளது. இந்த அலைபேசி பதிவில்., மனிஷா அழுத நிலையிலும்., அபின்ராஜ் மற்றும் அவனுடைய தோழி அனிதாவும் கான்பிரின்சில் இருந்துள்ளனர். அனிதாவிடம் தன்னிலையை கூறி தாலிப்பிச்சை போடுமாறு கதறியழுதுகொண்டு இருந்துள்ளார்.
மேலும்., மனிஷாவின் கர்ப்பம் கலைந்தது., நாடக காதல் காம கொடூரனின் லீலைகள் என பல விஷயம் இருந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மனிஷாவின் உறவினர்கள் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., தற்கொலை வழக்காக இருந்த வழக்குப்பதிவை தற்கொலை தூண்டுதல் வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பின்னர் அபின்ராஜை கைது செய்து., தாம்பரம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும்., மனிஷாவின் துயரத்தை அறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அபின்ராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர். இந்த விஷயத்தில் இருந்து பெண்கள் கட்டாயம் பாடம் கற்றுக்கொண்டு., தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாடக காதல் மூலமாக பெண்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதும்., நாடக காதல் பாலியல் வன்கொடுமையும்., தற்கொலை துயரமும் தொடர்ந்து வருகிறது என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்..
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai girl killed by husband due to illegal affair