ஷூவில் இருந்த பாம்பால் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்.! இல்லத்தரசிகளே மழை காலங்களில் உஷாராக இருங்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை வெள்ள நீரால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில்., சில நேரங்களில் பல துயர அசம்பாவிதங்களும் நடைபெறுகிறது. 

நாம் தினமும் அணியும் காலணிகளில் மழைக்காலங்களில் பூச்சிகள் போன்றவை நுழையலாம் என்றும்., காலணிகளை அணியும் போது பாதுகாப்பாக இருக்கிறதா? என்று சோதனை செய்து அணியுமாறு அறிவுறுத்தி வரப்படுகிறது.

இந்த நிலையில்., கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூட கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் இருக்கும் சிறுமியின் காலனியில் இருந்த பாம்பை பிடித்தது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வந்தது. 

snake in shoe,

இது போன்ற தருணத்தில் தற்போது காலனியில் இருந்த பாம்பு கடிதத்தில் பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கே.கே.நகர் பகுதியை அடுத்துள்ள கன்னிகாபுரம் பகுதியை சார்ந்தவர் பழனி. 

இவர் கார்பென்டராக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் சுமித்ரா (வயது 35). சுமித்ரா நேற்று இரவு வழக்கம்போல வீட்டினை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில்., ஷூவை கையில் எடுத்து அகற்றியுள்ளார். 

இந்த நேரத்தில்., ஷூவில் இருந்த பாம்பொன்று சுமித்ராவின் கையில் கடிதத்தை அடுத்து., அதிர்ச்சியடைந்த சுமிதா கணவரிடம் விஷயத்தை கூறி அலறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த நபர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai girl injured snake byte treatment in hospital


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->