செயின் பறிக்க வந்த திருடனை புரட்டியெடுத்த வீரமங்கை.! சென்னையில் ருசிகர சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள கே.கே.நகர் 102 ஆவது தெரு பகுதியை சார்ந்தவர் லதா (வயது 52). இவர் சென்னையில் இருக்கும் போரூரில் தனியார் மருந்தக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவர் தினமும் பணிக்கு பேருந்தில் வந்து பின்னர் செல்வது வழக்கம். இந்நிலையில்., நேற்று வழக்கம்போல பணிக்கு வந்த லதா., பணி நிறைவு பெற்றதும் பேருந்து மூலமாக கே.கே.நகர் வந்தடைந்தார். 

பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக முன்னுள்ள பி.டி.ராஜன் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த போது., இவரை பின்தொடர்ந்த இரு சக்கர வாகனத்தில் இருந்த வாலிபர்கள் லதாவின் 8 சவரன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.

chennai porur, chennai pour lake,

சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்த நிலையில்., சுதாரித்துக்கொண்ட லதா திருடனின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் நிலைகுலைந்த திருடன் கீழே விளைவே., மற்றொருவன் இரு சக்கர வானதுடன் தப்பி சென்றான். 

இதனை கவனித்துக்கொண்டு இருந்த பொதுமக்கள் கீழே விழுந்த வாலிபனை மனிதாபிமானத்துடன் ஊமைக்குத்தாக குத்தி கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டவன் ஆயிரம் விளக்கு பகுதியை சார்ந்த தினேஷ் (வயது 19) என்பதும்., இவனது கூட்டாளி ராஜா என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தப்பியோடிய ராஜாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai girl fight with chain snatching culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->