கணவன் கண்முண்ணே துடிதுடித்த மனைவி... அரங்கேறிய சோகம்..! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பல்வேறு விதமான விபத்துகள் அரங்கேறி பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு., கடுமையான இன்னல்களுக்கு உள்ளாக்குகிறது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மீஞ்சூர் ராமரெட்டிபாளையம் பகுதியை சார்ந்தவர் யுவராஜ் (வயது 28). இவர் மணலியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவியின் பெயர் ஜெயலட்சுமி (வயது 24). இவர்கள் இருவரும் நேற்று முன்தினமிரவு செங்குன்றத்தை அடுத்திருக்கும் பாடியநல்லூரில் உள்ள உறவினரின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். 

accident,

பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளின் மூலமாக வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில்., செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலையருகே வந்த போது பின்னல் வந்து கொண்டு இருந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. 

இதனால் பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி., கணவரின் கண்முன்னரே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும்., யுவராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பவே., இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai girl died in accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->