இருமலுக்கு ஊசி.. இளம்பெண்ணின் உயிரை அரைமணி நேரத்தில் காவு வாங்கிய தனியார் மருத்துவமனை..! சென்னையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள குன்றத்தூர் தரப்பாக்கம் பகுதியை சார்ந்தவர் நித்யா (வயது 23). இவர் பயின்று முடித்துவிட்டு வேலை தேடி வந்த நிலையில்., இவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவானது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பதறிப்போன பெற்றோர் அனகாபுத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் நித்யாவிற்கு பரிசோதனை செய்து முடித்த பின்னர் ஊசி போட்டுள்ளனர். ஊசி போடப்பட்ட சிறிது நேரத்திலேயே நித்யா மயங்கி விழுந்த நிலையில்., மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இதனால் மீண்டும் பதற்றமடைந்த பெற்றோர்கள் பம்மலில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தருணத்தில்., பம்மல் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க இயலாது என்று கூறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவமனை, ஆஸ்பத்திரி, hospital,

இதனைத்தொடர்ந்து குரோம்பேட்டையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு நித்யாவை அழைத்து சென்ற நிலையில்., நித்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இரண்டு அரைமணி நேரம் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த பெற்றோர்கள் கதறியளவே., தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் மகள் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். மேலும்., தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மகள் உயிரிழந்தார் என்பதை அறிந்து., அங்குள்ள காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில்., சம்பவம் நடைபெற்றது அனகாபுத்தூர் பகுதியில் உள்ள மருத்துவமனை என்பதால்., அங்குள்ள சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல் துறையினர் அறிவுறுத்தியதை தொடர்ந்து., சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். மேலும்., நித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., பிரேத பரிசோதனை முடிவிற்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai girl died hospital wrong treatment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->