ஷூவில் பாம்பு.. இரண்டு நாள் போராட்டம்.. அரங்கேறிய சோகம்.. அலட்சியம் கூடாது இல்லத்தரசிகளே..!!
in chennai girl died byte of shoe
தமிழகத்தில் தற்போது மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை வெள்ள நீரால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில்., சில நேரங்களில் பல துயர அசம்பாவிதங்களும் நடைபெறுகிறது.
நாம் தினமும் அணியும் காலணிகளில் மழைக்காலங்களில் பூச்சிகள் போன்றவை நுழையலாம் என்றும்., காலணிகளை அணியும் போது பாதுகாப்பாக இருக்கிறதா? என்று சோதனை செய்து அணியுமாறு அறிவுறுத்தி வரப்படுகிறது.
இந்த நிலையில்., கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூட கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் இருக்கும் சிறுமியின் காலனியில் இருந்த பாம்பை பிடித்தது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வந்தது.
இது போன்ற தருணத்தில் தற்போது காலனியில் இருந்த பாம்பு கடிதத்தில் பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கே.கே.நகர் பகுதியை அடுத்துள்ள கன்னிகாபுரம் பகுதியை சார்ந்தவர் பழனி.
இவர் கார்பென்டராக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் சுமித்ரா (வயது 35). சுமித்ரா நேற்று இரவு வழக்கம்போல வீட்டினை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில்., ஷூவை கையில் எடுத்து அகற்றியுள்ளார்.
ஷூவில் இருந்த பாம்பொன்று சுமித்ராவின் கையில் கடிதத்தை அடுத்து., அதிர்ச்சியடைந்த சுமிதா கணவரிடம் விஷயத்தை கூறி அலறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த நபர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில்., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பெண்., இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அவரது குடும்பத்தினரிடையே மற்றும் அக்கம் பக்கத்தினருடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இல்லத்தை சுத்தம் செய்யும் போது ஷூக்கள் உள்ள பகுதிக்கு செல்லும் போது., துடைப்பத்தை மாத்தி பிடித்து ஷூக்களை தூரத்தில் இருந்து சோதித்து பணியை செய்வது சாலை சிறந்தது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai girl died byte of shoe