நண்பனின் மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்கள்..! கண்ணீரில் இளம்தம்பதியின் இறுதி காரியம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் காந்திநகர் பகுதியை சார்ந்தவர் தீபா (வயது 26). இவரது கணவர் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வரும் காரணத்தால்., பணியின் காரணமாக அவ்வப்போது வெளியூருக்கு சென்று பணியாற்றிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்த நிலையில்., தீபாவுடைய கணவர் தச்சு பணியின் காரணமாக கடந்த ஜூலை மாதத்தின் போது வெளியூருக்கு சென்ற நிலையில்., கணவரின் நண்பரொருவர் வீட்டிற்கு வந்து சாக்லேட் கொடுத்துள்ளார். தனது கணவரின் நண்பர் என்பதால் எந்த விதமான ஐயமும் இன்றி சாப்பிட்டுள்ளார். சாக்லெட்டை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்துள்ளார். 

காம எண்ணத்தை அரங்கேற்ற வந்த ஹரிஷ்குமார் மற்றும் ரமேஷ்குமார் பெண்ணை மயக்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில்., இதனை வீடியோ காட்சிகளாகவும் பதிவு செய்து வைத்துள்ளார்கள். மயக்கத்தில் இருந்து தெரிந்தவுடன் நிர்வாணமாக தாம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில்., அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் நகையையும் எடுத்து சென்றுள்ளான்கள்.

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

பின்னர் இந்த வீடியோ காட்சிகளை காண்பித்த பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நிலையில்., வெளியூரில் இருந்து வந்த கணவரிடம் நடந்ததை கூறி கதறியழுதுள்ளார். இதனையடுத்து சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததை அடுத்து., வடபழனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த வழக்கில் தொடர்புடைய காம கொடூரன்கள் தலைமறைவாகிய நிலையில்., சென்னை நெசப்பாக்கம் பகுதியில் இருந்த இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai friend wife rapped by culprit police arrest culprits


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->