புது மாப்பிள்ளையை பொலந்து கட்டிய பெண் வீட்டார்..! போதையில் வெளியான பேரதிர்ச்சி உண்மை..!!
in Chennai fraud doctor arrest by police after marriage
சென்னையில் உள்ள வில்லிவாக்கம் வெங்கடேசன் நகரில் வசித்து வருபவன் கார்த்திக். இவன் தினமும் காலையில் வெள்ளை நிற ஆடை மற்றும் மருத்துவர் போல பாவனை செய்து., தனது ஆடம்பர காரில் புறப்பட்டு செல்லும் வழக்கத்தை வைத்துள்ளான். மேலும்., தனது காரில் அரசு பணி செய்வதை போல., ஜி என்ற எழுத்தில் குறிப்பிட்டு., தன்னை அரசு மருத்துவர் போல் பாவித்து வந்துள்ளான்.
இந்த விஷயத்தை கவனித்த அப்பகுதி மக்களும் பையன் நல்ல வசதியான மற்றும் பொறுப்பான உத்தியோகத்தில் இருப்பதாக எண்ணி., அதே பகுதியை சார்ந்த வசதியான குடும்பத்தார் கார்த்திக்கை கவனித்து வந்துள்ளார். இதனையடுத்து கார்த்திக்கின் நன்னடத்தை பிடித்ததால்., அவரின் மகளுக்கு பணம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து கார்த்திக் குடும்பத்தார் குறித்து விசாரிக்கையில்., தனக்கு பெற்றோர் இல்லை என்றும்., உறவினர்கள் மட்டும் இருப்பதாக தெரிவித்து, அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளான். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது வந்த நிலையில்., செவ்வாய்க்கிழமை திருமணமும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில்., இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியானது கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில்., நல்ல படியாக அனைத்தும் சிறப்புடன் முடிவடைந்தது என்று எண்ணி இருந்த நிலையில்., வரவேற்பு நிகழ்ச்சியில் கலவரம் செய்யும் வகையில்., கார்த்திக்கின் மாமா வரதட்சணை தொடர்பாக பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த சமயத்தில்., பல உண்மைகளும் போதையில் வெளிவந்துள்ளது. மேலும்., கார்த்திக் பிச்சைக்காரன் என்று கூறவே., இதனை கேட்டு கடுமையான அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார்., என்னவென்று விசாரிக்கும் சமயத்தில்., கார்த்திக்கை நோக்கி ஒரு கூட்டமும்., கார்த்திக்கின் மாமாவை நோக்கி ஒரு கூட்டமும் சென்று புரட்டி எடுத்து.
இதற்கு பின்னர் இருவரையும் அடித்து நொறுக்கிய வீட்டார்கள்., காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து மேற்கொண்ட விசாரணையில்., உறவினர்கள் என்று வந்தவர்களும் போலியானவர்கள்., அரசு மருத்துவர் என்பதும் பொய் என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. கோவையை சொந்த ஊராக கொண்ட கார்த்திக்., கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னதாக சென்னைக்கு வந்து நாடகமாடியது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai fraud doctor arrest by police after marriage