மகன் - மகளுக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி.! கண்ணீரை ஏற்படுத்திய கடிதம்.!!
in chennai father mother attempt suicide due to loan problem
தமிழகத்தின் சென்னையை அடுத்துள்ள ஓட்டேரி செல்லப்பா தெருவில் வசித்து வருபவரின் பெயர் சந்திரன் (வயது 64). இவரது மனைவியின் பெயர் விஜயலட்சுமி (வயது 60). இவர்கள் இருவருக்கும் ஹரிப்ரசாத் என்கிற மகனும்., ராதிகா என்ற மகளும் உள்ள நிலையில்., இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர்.
சந்திரன் - விஜயலட்சுமி தங்களின் இல்லத்தில் தனியாக வசித்து வந்த நிலையில்., இவர்களின் இல்லத்தின் கதவு நேற்று மதியம் திறந்து இருந்துள்ளது. இந்த வீட்டில் பணியாளாக பணியாற்றிவரும் சித்ரா என்ற பெண்மணி வீட்டிற்கு வந்த சமயத்தில்., படுக்கையறையில் சந்திரன் - விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனைக்கண்டு பதறிப்போன சித்ரா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த விசாரணையில்., மயிலாப்பூரில் வசித்து வந்த சந்திரன் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வசதியாக வாழ்ந்து வந்த நிலையில்., திடீரென கடன் தொல்லையானது ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்தமாக வசித்து வந்த வீட்டினை கடன் வாங்கியவருக்கு கொடுத்துவிட்டு., கடந்த வருடத்தில் ஓட்டேரியில் இருக்கும் வாடகை வீட்டிற்கு கடந்த வருடத்தில் வருகை தந்துள்ளனர்.
இந்த சமயத்திலும் கடன் தொல்லை அதிகரித்து வந்ததால்., இவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும்., இருவரும் தங்களின் மகன் மற்றும் மகளிற்கு தனிப்படை எழுதிய கடிதமும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில்., நான் வாங்கிய கடனிற்காக மாதம் ரூ.1 இலட்சத்திற்கு வட்டி கட்டி வந்தேன்.
எங்களால் தொடர்ந்து வட்டி மற்றும் அசல் கட்ட இயலாததால்., வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை முடிவு எடுத்து கொள்கிறேன்.. எங்களிடம் கடன் வழங்கிய நபர்கள் எனது மகன் மற்றும் மகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai father mother attempt suicide due to loan problem