முகநூல் காதல்.. பணம் பறிக்க காதலியின் புகைப்படத்தை மாபிங்.. கண்ணீரில் பெண்ணின் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உலா சவுக்கார்பேட்டை பகுதியில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சார்ந்த தினேஷ் (வயது 40) என்ற வாலிபருடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை அடுத்து, இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

மேலும், தங்களின் அலைபேசி எண்ணை பகிர்ந்து, தங்களது புகைப்படத்தையும் பகிர்ந்து பேசியுள்ளனர். இந்த நிலையில், பெண்ணின் வசதி குறித்து அறிந்துகொண்ட தினேஷ் பணம் பறிக்க திட்டத்தை தீட்டியுள்ளான். 

இதன்பின்னர், தனது காதலிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட தினேஷ், சுயமாக தொழில் துவங்கவுள்ளதால் பணம் தேவை என்று கேட்டுள்ளார். இதற்கு பெண் பணம் தர மறுப்பு தெரிவித்த நிலையில், உனது புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்து வைத்துள்ளேன். 

எனக்கு நீ ரூ.5 இலட்சம் கொடுக்கவில்லை என்றால், ஆபாச புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்வேன் என்று கூறியுள்ளான். இனால் பதறிய பெண்மணி, இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், காவல் துறையினரின் ஆலோசனைப்படி தினேஷை சென்னைக்கு வரவழைத்து, தினேஷின் நண்பரான ராஜேஷ் என்பவரை வைத்து பணம் வாங்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து ராஜேஷை கைது செய்த காவல் துறையினர், விசாரணைக்கு பின்னர் அகமதாபாத் தப்பி சென்ற தினேஷை கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai Facebook love girl torture for money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->