மதுபாட்டிலை மறைத்து வைத்த சகோதரி கொடூர கொலை.. தடுக்க வந்த மாப்பிள்ளை, தாயை பதம் பார்த்த கொடூர குடிமகன்.!!
in chennai drinking culprit killed her sister
தமிழகத்தின் சென்னையில் உள்ள வளசரவாக்கம் வேலன் நகர் பகுதியை சார்ந்தவர் தாரகேஸ்வரி (வயது 56). இவர் இலங்கையை சார்ந்தவர் ஆவார். மேலும், கடந்த சில வருடமாகவே சென்னையில் இருக்கும் தனது தாயார் வேதநாயகி (வயது 80) மற்றும் மகன் ஆதிசன் (வயது 32) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
தாரகேஸ்வரிக்கு 49 வயதுடைய குகதாசன் என்ற தம்பி உள்ள நிலையில், இவர் சபரிமலைக்கு மாலை அணிந்து இலங்கையில் இருந்து கடந்த 13 ஆம் தேதியன்று சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் சபரிமலைக்கு சென்றுவிட்டு தனது சகோதரியின் இல்லத்தில் தங்கியிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில்., குகதாசனிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், சபரிமலைக்கு சென்று வந்தவுடன் மீண்டும் மது அருந்தும் பழக்கத்தை துவக்கியுள்ளார். நேற்று 2 மதுபானத்தை வீட்டிற்கு வாங்கி வந்த நிலையில், ஒரு பாட்டில் மதுவை குடித்துவிட்டு, மற்றொரு பாட்டிலை மறைத்து வைத்துள்ளார்.
இரவு நேரத்தில் மீதமுள்ள மதுவை அருந்த மதுபாட்டிலை தேடிய நேரத்தில் மதுபாட்டில் மாயமாகவே, தனது சகோதரி மறைத்து வைத்திருப்பார் என்று கூறி தாரகேஸ்வரியிடம் கேட்டுள்ளார். தாரகேஸ்வரி மதுபாட்டில் குறித்து தனக்கு தெரியாது என்று தெரிவிக்கவே, இவர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த குகதாசன் தாரகேஸ்வரியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் நிலைதடுமாறி விழுந்த தாரகேஸ்வரி அலறவே, அதிர்ச்சியடைந்த ஆதிசன் மற்றும் வேதநாயகி வந்த நேரத்தில், இவர்கள் இருவரையும் படுகாயமடைந்துள்ளார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு குகதாசனை கைது செய்தனர்.
மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தாரகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இவரின் தாயார் மற்றும் மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai drinking culprit killed her sister