கல்லூரி வகுப்பறையில் பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில்., வெளியான பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள அரும்பாக்கம் - பூந்தமல்லி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் டி.ஜி.வைஷ்ணவி பெண்கள் கல்லூரியானது செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஹரிசாந்தி. இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக பணியிலிருந்து விலகி விட்ட நிலையில்., கல்லூரிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இவர்  அவ்வப்போது கல்லூரிக்கு வந்து செல்லும் நிலையில்., சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல கல்லூரிக்கு வந்த ஹரிசாந்தி தான் பாடம் எடுத்த முதலாவது மாடியில் உள்ள வகுப்பறையில் சென்று இருந்துள்ளார். இந்த நிலையில்., வகுப்பறையில் இருக்கும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவிகள் இவரது உடலை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினர். 

suicide, suicide attempt, died, murder, killed,

இந்த தகவலை அறிந்த ஆசிரியர்கள் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில்., இதே கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் ஒருவருக்கும் - ஆசிரியை ஹரிசாந்திக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை ஒரே கல்லூரியில் பணியாற்றி காதலித்து வந்த நிலையில்., கடந்த 2016 ஆம் வருடத்தின் போது பேராசிரியருக்கு உறவினரின் மகளுடன் தீடீரென திருமணம் முடிந்துள்ளது. 

love, love images,

பேராசிரியருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்., ஹரிசாந்தியும் மற்றொரு பணி காரணமாக கல்லூரியில் இருந்து விலகி சென்றதை அடுத்து., இருவருக்கும் இடையேயான வழக்கமான பழக்கம் குறைந்துள்ளது. இருப்பினும் ஹரிசாந்தி அவ்போது பேராசிரியரை சந்தித்து பேசி வந்துகொண்டு இருந்த நிலையில்., தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள கூறி வற்பறுத்தியுள்ளார். இதற்கு பேராசிரியர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். 

இதனால் ஏற்பட்ட கடுமையான மனவேதனையில் தவித்து வந்த ஆசிரியை மீண்டும் கல்லூரிக்கு சென்று தனது காதலரான பேராசிரியரை சந்தித்து பேசி திருமணம் செய்வது குறித்து வாதிட்டுள்ளார். இவரை திருமணம் செய்து கொள்ள பேராசிரியர் மறுப்பு தெரிவிக்கவே., மனமுடைந்து ஹரிசாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai college teacher suicide attempt due to love failure


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->