சென்னை 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொலை விவகாரத்தில், காமுகனின் பேரதிர்ச்சி வாக்குமூலம்.. பரிதவிக்கும் சிறுமியின் பெற்றோர்.!!
in Chennai child sexual abuse police investigate
சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியில் வசித்து வந்த வடமாநில தம்பதிகளுக்கு 10 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறார். இவர் இங்குள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினத்தின் இரவு நேரத்தில் வீட்டின் வெளியே உள்ள கழிவறைக்கு சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் கழிவறைக்கு சென்று பார்க்கையில் சிறுமி காணவில்லை. சிறுமியை அங்குள்ள தெரு முழுவதும் தேடியலைந்த நிலையில், இது குறித்து காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சந்தேகத்தின் கீழ் பெற்றோர்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று பார்க்கையில், வீட்டின் பின்புறத்தில் உள்ள காலி மனையில் டார்ச் அடித்து பார்த்துள்ளனர்.
இதில் சிறுமி இரத்த வெள்ளத்தில் கீழ் விழுந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை காவல் துறையினரின் உதவியுடன் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யவே, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், கழிவறைக்கு சென்ற சிறுமி எப்படி? மேல் தளத்தில் இருந்து கீழே விழுந்தார்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து மேல் தளத்தில் வசித்து வரும் கட்டிட தொழிலாளியான சுரேஷ் (வயது 30) என்பவனை சந்தேகத்தின் கீழ் கைது செய்ததில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதும், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தை சார்ந்த சுரேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்பே இங்கு குடிவந்துள்ளான். இவன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறான்.
அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பணியாற்றி வரும் நிலையில், இவனுடன் மனைவி என்று கூறிக்கொண்டு பெண் தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினத்தின் போது போதையில் இருந்த சுரேஷ், தங்கியிருந்த பெண்ணை கொளத்தூருக்கு அனுப்பிவிட்டுள்ளான். இதன்பின்னர் வீட்டின் படிக்கட்டில் அமர்ந்து அலைபேசியில் ஆபாச படம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளான்.
இந்நிலையில், கழிவறைக்கு செல்ல வந்த சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து மாடிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்கையில், சிறுமி பதற்றமடைந்த அவனிடம் போராடி பலனில்லாது, மூச்சுத்திணறி மயங்கியுள்ளார். பின்னர் சிறுமி மயக்கத்தில் இருப்பார் என்று எண்ணிய காமுகன் சிறுமியை எழுப்ப முயற்சித்த தருணத்தில், சிறுமி எழுந்திரிக்காததால் மாடியில் இருந்து வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல தனது அறைக்குள் சென்று கதவை பூட்டியுள்ளான்.
மேலும், சிறுமி காணாமல் போன நேரத்தில் பெற்றோர்கள் சுரேஷின் வீட்டு கதவை தட்டிய சில நிமிடத்திற்கு பின்னர் வெளியே வந்து, ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியுள்ளான். சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து தேடி, சிறுமி கீழே இருப்பதை பெற்றோர்கள் கவனித்ததும் அவசர ஊர்தியில் நல்லவன் போல அனுப்பி வைத்துள்ளான். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து துடிதுடிக்க கொலை செய்த காமுகன் ஆடிய நாடகம் அப்பகுதி மக்களிடையே மட்டுமல்லாது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai child sexual abuse police investigate