சிறுமியை சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்த காமுகன்கள்.. சிறுமியின் வாழ்க்கையில் அரங்கேறிய பெரும் சோகம்.!!
in chennai child sexual abuse police arrest and investigation
சென்னையில் உள்ள பள்ளிக்கரணை பகுதியை சார்ந்த 17 வயதாகும் சிறுமி தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மலர்விழி என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இவரிடம் தனக்கு வேலை வாங்கித்தர கூறி சிறுமி கேட்கவே, மலர்விழியும் தனக்கு தெரிந்த நபர்கள் என்று கூறி ரங்கராஜ். ஜெயக்குமார், ஜெபராஜ் ஆகியோரிடம் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.
இவர்கள் மூவரும் சேர்ந்து சிறுமிக்கு பணி வாங்கி தருவதாக கூறி கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். இதன்பின்னர் வீட்டினை விட்டு வெளியேறி வந்த சிறுமி நீலகிரி அதிவிரைவு வண்டியின் மூலமாக மேட்டுப்பாளையம் வந்துள்ளார்.
இரயில் நிலையத்தில் இறங்கிய சிறுமி செய்வதறியாது திகைத்து, அப்பகுதியில் இருந்த கால் டாக்சி ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை அழைத்துள்ளார். ஓட்டுநர் மணிகண்டனிடம் சிறுமி வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு வந்துள்ளதாகவும், தனக்கு ஊட்டியில் வேலை வாங்கி தருமாறும் கூறியுள்ளார்.
இதனையடுத்து டாக்சி ஓட்டுநர் ஊட்டிக்கு அழைத்து சென்று இரண்டு நாட்கள் தங்கவைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் மேட்டுப்பாளையத்திற்கு அழைத்து வந்த காமுகன், தனது மனைவியிடம் சிறுமி இரயில் நிலையத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து இருந்ததாக தெரிவித்துள்ளான்.
மேலும், இவரை பார்க்க பாவமாக இருந்துள்ளது என்றும், இவர் இங்கேயே இருக்கட்டும் என்றும் கூறவே, மணிகண்டனின் மனைவியும் உண்மையை அறியாது, கணவனின் பேச்சை நம்பி இரக்கப்பட்டு தங்க அனுமதி செய்துள்ளனர். இந்த சமயத்தில், மணிகண்டனின் மனைவி தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுவிட்ட நிலையில், மணிகண்டன் சிறுமியை 5 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதன்பின்னர் சிறுமியை சென்னைக்கு அனுப்பிவைத்த நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுமியை அனுமதி செய்யவே, இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து மேற்கொண்ட விசாரணையில், மேற்கூறிய பேரதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதன்பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, இது தொடர்பான புகாரை விசாரித்த காவல் துறையினர் டாக்சி ஓட்டுநர் மணிகண்டன், ரங்கராஜ், ஜெயக்குமார், ஜெபராஜ், மலர்விழி ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மலர்விழி சென்னையில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதும், சிறுமிகளை விபசார தொழில் ஈடுபடுத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் ஐவரும் கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai child sexual abuse police arrest and investigation