சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு உள்ளாக்கும் கொடூரம்?.. தங்கையை மீட்ட அண்ணனுக்கு காத்திருந்த சோகம்.. விசாரணையில் பேரதிர்ச்சி.!!
in Chennai child forced prostitution police arrest gang and investigation
தமிழகத்தின் சென்னையில் உள்ள அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டார். இவரை பாலியல் தொழில் உட்படுத்த இவர் கடத்தப்பட்டதும், காரில் தங்கை இருந்த நேரத்தில் இவரின் சகோதரர் எதற்சையாக கண்டு விசாரித்துள்ளார்.
மேலும், இந்த காரில் இரண்டு இளைஞர்களும் இருந்த நிலையில், இவர்களிடம் விசாரித்த நேரத்தில் வாலிபர்கள் சிறுமியை பாலியல் தொழிலுக்கு பணம் கொடுத்து அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சிறுமியின் சகோதரர், இளைஞர்களிடம் தகராறு செய்யவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திரைப்பட பாணியில் நடுசாலையில் சண்டைக்காட்சிகள் அரங்கேற, இது தொடர்பாக தகவலை அறிந்த சூளைமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைக்கு பின்னர் காவல் துறையினர் தெரிவித்தாவது, சிறுமியின் பெற்றோர்கள் இது தொடர்பாக புகார் தெரிவிக்க தயக்கம் தெரிவித்தனர். பின்னர் பெற்றோரிடம் காவல் துறை உயர் அதிகாரிகள் பேசி, அவர்களுக்கு எடுத்துரைத்து பின்னர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் மற்றொரு இளைஞர் பைசல் என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரகாஷை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவான பைசலை தேடி வருகின்றனர். மேலும், சிறுமியை விபசார கும்பலிடம் பணம் கொடுத்து அழைத்து வந்திருக்கலாம் என்ற சநேதகத்தில் விசாரணை துவங்கி பெரும் அதிர்ச்சியில் முடிந்துள்ளது.
காவல் துறையினரின் சந்தேகப்படி சிறுமியை காரில் கடத்திய இளைஞர்கள், வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த பெண்ணிடம் இருந்து பணம் கொடுத்து அழைத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மகளிர் காவல் துறையினர் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு விபச்சாரத்திற்கு சிறுமியை உட்படுத்திய பெண்மணியை கைது செய்தனர்.
இவரிடம் 14 வயது சிறுமி சிக்கியது எப்படி?.. இது போன்ற பல சிறுமிகள் விபசாரத்தில் உள்ளனரா? என்பது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுமியின் பெற்றோரிடம் மேற்கொண்ட விசாரணையிலும், சிறுமி இரண்டு முறை இரவு நேரங்களில் மாயமானது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai child forced prostitution police arrest gang and investigation