காரின் டயர் வெடித்து பள்ளத்தில் பாய்ந்த கார்... சென்னை காவல் அதிகாரி பரிதாப பலி..!!
in Chennai car accident police officer died
சென்னையில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள காவல் குடியிருப்பை சார்ந்தவர் துரைராஜ் (வயது 24). இவர் சென்னையில் உள்ள ஜாம்பஜார் பகுதியில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். செய்யாறு காவல் நிலையத்தில் மதுவிலக்கு பிரிவில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சன்னிலயாத் (வயது 45). இவர்கள் இரண்டு பெரும் சேர்ந்து அதிகாலை நேரத்தில் செய்யாறில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருந்துள்ளனர்.
இந்த நேரத்தில், காரினை சன்னிலயாத் இயக்கவே, இவர்களுடன் வந்த துரைராஜ் அருகில் அமர்ந்துள்ளது. இவர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்குவார்ச்சத்திரம் அருகே வந்த சமயத்தில் காரின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டினை இழந்த காரனது, 50 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு அங்குல பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதில் காரின் முன்பகுதி மற்றும், பின் பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில், காவல் அதிகாரி துரைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியாகியுள்ளார். சன்னியலாத் உயிருக்கு போராடவே, இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் அதிகாரியை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில், மருத்துவமனையில் அனுமதியாகியிருந்த காவல் அதிகாரிக்கும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai car accident police officer died