தாயின் கண்முன்னே துடிதுடித்த குழந்தை.! பால்கனியில் சோறு ஊட்டிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!! பெற்றோர்களே கவனம்..!!
in Chennai baby died when mother giving food in balcony
தமிழகத்திலுள்ள சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் இருக்கும் சரவணன் முதலி தெருவைச் சார்ந்தவர் அருண். இவர் பாரிமுனை பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவியின் பெயர் ஜெயஸ்.ரீ இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் ஆன நிலையில்., ஒன்றரை வயதுடைய பூமிகா என்ற மகளும் இருக்கிறார்.
இவர்கள் அனைவரும் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் மூன்றாவது மாடியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை ஜெயஸ்ரீ தனது குழந்தைக்கு வீட்டின் பால்கனியில் இருந்து நின்றபடி சாப்பாடு கொடுத்து கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில்., குழந்தை சாப்பாடு உண்ண மறுத்து அடம் பிடித்து அழுது உள்ளது. இந்த தருணத்தில்., தாயின் கைகளில் இருந்து தவறிய குழந்தை மூன்றாம் மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக தலையில் பலத்த காயமடைந்த நிலையில்., உயிருக்கு போராடி துடித்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் ஜெயஸ்ரீ கூச்சலிடவே., சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., தாயின் முன்னதாகவே குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai baby died when mother giving food in balcony