சென்னை பிரதான ஏடிஎம் இயந்திரத்தில் துணிகர கொள்ளை.! கதறிய கொள்ளையன்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருக்கும் அண்ணாநகர் பகுதியை சார்ந்த தனியார் கல்லூரி பகுதியில் இருக்கும் வங்கியில் பணம் எடுக்கும் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த வங்கியில் இருக்கும் பணம் எடுக்கும் இயந்திரத்தில்., கொள்ளை முயற்சி நடப்பதாக வங்கியின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைக்கவே., தகவலை அறிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து., பணம் எடுக்கும் இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்து., இயந்திரத்தை உடைக்க முயன்ற நபரை கைது செய்தனர். 

மது போதையில் இருந்த நபரை கைது செய்த காவல் துறையினர்., காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., சேலம் மாவட்டத்தில் இருக்கும் கெங்கவல்லி பகுதியை சார்ந்த சங்கர் (22) என்பதும்., ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர்., சென்னை குடிநீர் வாரியத்தில் இயங்கும் லாரியை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  

இதனையடுத்து அவரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai ATM man tried to robbery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->