அமலானது 144 உத்தரவு.. சீல் வைக்கப்பட்ட மாவட்டங்கள்.. அதிரடியாகும் உத்தரவுகள்..!!
in chennai and tamilnadu curfew 144 form now
தமிழகம் முழுவதும் 144 தடை விதிப்பு உத்தரவாகியுள்ளது. இதன்படி, ரேஷன் கடை, ஆவின் கடை, அம்மா உனகவகம் திறந்திருக்கும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருக்கும்.
அத்தியாவசிய பொருட்களை வாங்க வீடுகளை விட்டு வெளியே சென்றாலும், காவல் துறை அதிகாரிகள் விசாரணை செய்வார்கள்.. உணவத்தில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. மார்ச் 16 வரை திட்டமிடப்பட்டுள்ள திருமண நிகழ்ச்சிக்கு மட்டுமே மாண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் அதிகப்பட்சம் 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
பொதுப்போக்குவரத்து மற்றும் மக்கள் பயன்படுத்தி வந்த ஆட்டோ, ஓலா போன்ற எந்த ஒரு சேவையும் இருக்காது.. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூட்டமாக இருக்க கூடாது. வங்கிகள், ஏ.டி.எம் மற்றும் மருந்தகம் செயல்படும். எரிவாயு நிலையங்கள் செயல்படும்.
இதனைப்போன்று காவல் துறையினர் அந்தந்த காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளது. கடைகளில் நிற்கும் நபர்கள் ஒரு நபருக்கு ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் டெலிவெரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் மூடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அனாவசியமாக மக்கள் வெளியே வருவது மற்றும் சுற்றி திரிவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டம் தன் கடமையை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர ஊர்திகள் மற்றும் துர் நிகழ்வுகளுக்கு செல்லும் வாகனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai and tamilnadu curfew 144 form now