டிவி பார்த்ததற்கு பெற்றோர்கள் திட்டியதால் தூக்கிட்ட மாணவி.! நூலிழையில் நூலில் காத்திருந்த பேரதிர்ச்சி.!!
in chennai a luck is saving girl life after hanging over
சென்னையில் உள்ள கிண்டிக்கு அருகில் உள்ள பகுதியில் 18 வயதுடைய மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில்., இவர் வீட்டில் இருக்கும் சமயத்தில் அதிக நேரம் தொலைக்காட்சியை பார்த்து கொண்டு இருக்கும் பழக்கத்தை வைத்துள்ளார். இதனை பலமுறை கண்டித்த பெற்றோர்கள்., தொலைக்காட்சியை நீண்ட நேரம் பார்க்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நேரத்தில்., வழக்கம் போல நேற்று இரவு அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருந்த மாணவியை., பெற்றோர்கள் அழைத்து கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவி., தனது அறைக்குள் சென்று கதவை பூட்டி இருந்துள்ளார்.
இந்த சமயத்தில்., திடீரென மாணவியின் அலறல் சத்தம் கேட்க., அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த சமயத்தில்., மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள இருந்ததும்., மாணவியின் எடை தாங்காமல் கயிறு அறுந்து விழுந்ததில் உயிர் தப்பியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
உயிருக்கு போராடிய அவரை மீட்ட பெற்றோர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கவே., இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in chennai a luck is saving girl life after hanging over