இரண்டு மதமான கைக்குழந்தையுடன் தர்ணாவில் இளம்பெண்.! கணவரின் எண்ணத்தால் நடுவீதியில் நிற்கதியாக நிற்கும் பெண்ணின் கண்ணீர் துயரம்.!!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கொடுக்குவார்ப்பேட்டையில் எழில் நகர் பகுதியை சார்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 28). தண்டையார்பேட்டையை சார்ந்தவர் பவித்ரா (வயது 23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு., திருமணம் நடைபெற்று முடிந்தது. 

இவர்களுக்கு திருமணம் முடிந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே ரமேஷ் குமாரின் தந்தை இறந்து விடவே., பவித்ராவை திருமணம் முடிந்த நேரம் சரியில்லை என்று கூறி அவரை தொடர் கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளார். 

இந்த நிலையில்., பவித்ராவை அவரின் தாயார் இல்லத்திற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு சில மாதங்கள் கழித்து அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில்., கர்ப்பிணியாக இருந்த பவித்ராவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்த சூழ்நிலையில்., குழந்தை பிறந்து சுமார் 2 மாதங்கள் கழித்தும் பவித்ராவை ரவிக்குமார் அழைத்து செல்லாததால்., இது குறித்து கணவருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த சமயத்தில் உன்னோடு வாழ பிடிக்கவில்லை என்று ரவி கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பவித்ரா தனது இரண்டு மாதமான கைக்குழந்தையை அழைத்து கொண்டு., கணவரின் இல்லத்திற்கு சென்று வாயிலில் இருந்து தர்ணா போராட்டத்தை துவங்கினார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai a girl strike due to her husband activities


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->