செங்கல் சூளை முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட நான்கு வயது பெண் குழந்தை.! கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த கொடூரம்.!!  - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் பல விதமான துயர சம்பவங்களும்., கொடூர சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் துயர சம்பவங்களில் நம்மை பெரும் அச்சத்தில் ஆழ்த்துவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிதான். பெண்களை சூறையாடும் காம கொடூரன்களுக்கு தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே இது போன்ற துயரத்தில் இருந்து பெண்களை பாதுகாக்க இயலும். 

சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த வெள்ளவேடு செங்கல் சூளையில் பணியாற்றுவதற்காக ஒடிசா மாநிலத்தை சார்ந்த தம்பதியினர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக சென்னைக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில்., இவர்கள் இங்கு வந்த பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

அந்த குழந்தையையும் உடன் வைத்து கொண்டு பணியாற்றி வரும் நிலையில்., தற்போது அந்த குழந்தைக்கு நான்கு வயதாகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக செங்கல் சூளையில் பணியை நிறைவு செய்து வீட்டிற்கு திரும்பிய பின்னர் சிறுமி மாயமாகியுள்ளார். சிறுமியை தேடி அலைந்த பெற்றோர்., அவரை காணாததால் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். 

sexual harassment, sexual abuse, rapped,

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., சிறுமி அங்குள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. செங்கல் சூளையில் பணியாற்றிய மூன்று இளைஞர்களை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., மூன்று பேரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததை கூறியுள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிய காவல் துறையினர் மூவரின் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai 4 year child rapped and killed police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->