கணவன் - மனைவி சண்டையில் விபரீத முடிவெடுத்த கணவன்... செங்கல்பட்டில் பெரும் சோகம்.!!
in Chengaltpat father attempt suicide with child due to family problem
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள முத்திகை நல்லான்குப்பம் பகுதியை சார்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவியின் பெயர் சுந்தரி.
இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மது போதைக்கு அடிமையான பாலகிருஷ்ணன் தினமும் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்துள்ளார்.
நேற்றும் வழக்கம்போல பாலகிருஷ்ணன் மது அருந்திவிட்டு வந்ததால், தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுந்தரி ஆத்திரமடைந்து அருகில் இருக்கும் தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
இவர்களின் இளைய மகன் தேவா அவரதுநண்பர்களுடன் விளையாண்டு கொண்டு இருந்த நிலையில், தனது இல்லத்திற்கு மீண்டும் சென்றுள்ளார். இந்த சமயத்தில், வீட்டில் சகோதரர் வெற்றிவேல் தந்தையால் தூக்கில் தொங்கவிடும் காட்சியையும், தந்தை மற்றொரு தூக்கில் தொங்குவதையும் கண்டுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேவா தனது தாயாரிடம் சென்று விஷயத்தை தெரிவிக்கவே., தகவலறிந்து வந்த குடும்பத்தினர் பார்க்கையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chengaltpat father attempt suicide with child due to family problem