பள்ளி வளாகத்தில் மது... தட்டிக்கேட்க சென்ற ஆசிரியரை, தாக்கி அனுப்பிய கொடூரம்..!!  - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியை அடுத்துள்ள அச்சரப்பாக்கத்தில் அரசு பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்றிரவு மர்ம நபர்கள் மதுபானத்துடன் வருகை தந்துள்ளனர். 

இரவு நேரம் என்பதால் பள்ளியில் யாரும் இல்லாத நிலையில், அங்கேயே மது அருந்திவிட்டு படுத்து உறங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை நேரத்தில் பள்ளிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம் போல வருகை தந்துள்ளனர். 

இந்த சமயத்தில், மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்ததையடுத்து, பள்ளியின் ஆசிரியரான முனியாண்டி மர்ம கும்பலை எச்சரித்து பள்ளி வளாகத்தில் இருந்து வெளியே செல்ல கூறியுள்ளார். 

இதனால் மர்ம கும்பலுக்கு ஆத்திரம் ஏற்பட்டதை அடுத்து, ஆசிரியரை தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஆசிரியரை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த விஷயத்தை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரகுமான் மற்றும் இதய துள்ளா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chengalpattu govt school teacher attacked by drunken monkey culprit


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->