பெற்றோர்கள் துணையின்றி, பெற்றோர்களுக்கு தெரியாமல் குளத்திற்கு குளிக்க சென்ற 3 சிறுவர்கள்.. அரங்கேறிய பரிதாபம்.!!
in Chengalpattu district child died in lake
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஓரத்தி பகுதியை அடுத்துள்ள வடக்கு புத்தூர் கிராமத்தை சார்ந்தவர் முரளி. இவரது மகனின் பெயர் தர்மேஷ் (வயது 9). இப்பகுதியை சார்ந்தவர் ரவி. இவருக்கு ராஜா என்கிற 12 வயதுடைய மகனும், ஆகாஷ் என்கிற 11 வயதுடைய மகனும் உள்ளனர்.
மேற்கூறிய மூன்று சிறுவர்களும் வடமடிப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் மூவரும் குளத்தில் குளிக்க ஆசைப்பட்டு, பெற்றோர்களிடம் தெரிவிக்காமல் மாலை நேரத்தில் குளிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் மூவரும் இரவு நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் பெற்றோர்கள் ஊர் முழுவதும் தெரியலைந்துள்ளார். இவர்களை காணாது பரிதவித்த பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
மேலும், குளக்கரை பகுதியில் சென்று பார்க்கலாம் என்று கூறி குளக்கரை பகுதியில் தேடிய நேரத்தில், இவர்களின் உடைகள் மற்றும் செருப்புகள் இருந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களே சிறுவர்களை குளத்தில் இறங்கி தேடியுள்ளனர்.
இதன் பின்னர் இவர்கள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டது. சிறுவர்களின் உடலை கண்டு கிராமத்தினர் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chengalpattu district child died in lake