செங்கல்பட்டு., காட்டிற்குள் நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலம்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாலியல் வன்முறைகளுக்கு எதிரான அநீதிகளை குறைப்பதற்கு., அந்தந்த நாடுகளில் சட்டங்கள் கடுமையாக பட்சத்திலேயே இதுபோன்ற பிரச்சனைகளை குறைக்க முடியும். பெண்கள் பலவிதமான பிரச்சனைகளுக்கு மத்தியில் தங்களின் அன்றாட பணியை செய்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். 

இந்த நிலையில்., செங்கல்பட்டு அருகே நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு அடுத்துள்ள கவிதண்டலம் மேட்டுபகுதியை சார்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவியின் பெயர் கோமதி. இவர்கள் இருவரும் மரம் வெட்டும் தொழிலை செய்து வந்த நிலையில்., நேற்று பணிக்காக சென்ற கோமதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதனையடுத்து தனது மனைவியை அங்கு உள்ள பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால்., அதிர்ச்சி அடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து உள்ளார். இந்த சமயத்தில்., அந்த பகுதியில் இருக்கும் ஏரிக்கரை கால்வாய் புதரில் நிர்வாணமாக பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. 

செங்கல்பட்டு பெண் கொலை, செங்கல்பட்டு பெண் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை,

இதனை அறிந்த காவல்துறையினர்., சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த சமயத்தில்., பெண்ணொருவர் நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்., இந்த சடலம் கோமதி என்பதை உறுதி செய்துள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். மேலும்., சம்பவ இடத்தில் இருக்கும் தடயங்களையும் சேகரித்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்., பெண் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில்.,  பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த தகவல் வெளியாகும் பட்சத்தில்., பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chengalpat woman rapped and killed in forest area


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->