கண்ட இடத்தில் கை வைக்கிறார்...! ஆசிரியரா அவர்?., வெளிப்படையாக உல்லாசத்திற்கு அழைக்கிறார்..!! பவானியில் பரபரப்பு..!!
in bhavani teacher sexual torture students police arrest sexual culprit
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறான அநீதிகளை குறைக்க., நமது நாட்டின் சட்ட திட்டங்கள் கடுமையாகும் பட்சத்தில் இதனை குறைக்க இயலும். இந்த நிலையில்., பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறியது பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள குருப்பநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்தவரின் பெயர் செல்லமுத்து. இவரது மகனின் பெயர் சக்திவேல். சக்திவேல் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளியில் பதினோராம் வகுப்பில் பயின்று வரும் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாக புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து வந்த நிலையில்., பள்ளியில் பயின்று வந்த மாணவிகளை உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்து வந்துள்ளான்.
இதுமட்டுமல்லாது மாணவிகளிடம் அத்துமீறி தொட்டுப்பேசியும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இதனையடுத்து இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில்., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஆசிரியரை தீவிரமாக தேடி வந்த நிலையில்., காவல் துறையினர் சக்திவேலை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in bhavani teacher sexual torture students police arrest sexual culprit