தாயை அனாதையாக பாவித்து., நடுரோட்டியில் விட்டு சென்ற சோகம்.! அரியலூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செங்குந்தர்புரம் கம்பர் தெரு பகுதியை சார்ந்தவர் பட்டம்மாள் (வயது 95). இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். இவருக்கு சண்முகம் மற்றும் சதாசிவம் என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில்., இவர்கள் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். 

மேலும்., இருவரும் தனித்தனியாக வசித்து வரும் காரணத்தால்., தனது தாயாரை சரி வர கவனிக்கவில்லை என்று தெரியவருகிறது. இதனால் கடுமையான உடல்நல குறைவானது ஏற்பட்டு இருந்த பட்டம்மாளை அங்குள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். இந்த தருணத்தில்., தனது மகன்களை காண வேண்டும் என்ற ஆவலானது தாயாருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து மகனின் இல்லத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்த சமயத்தில்., இரண்டு மகன்களும் தாயாரை இல்லத்தில் சேர்க்காமல் விரட்டியடித்த நிலையில்., இவரின் மகளான சகுந்தலாவின் இல்லத்திற்கு சென்றுள்ளார். சகுந்தலாவின் இல்லத்திற்கு சென்று சில நாட்கள் இருந்த நிலையில்., தனது சகோதரரான சண்முகத்தின் இல்லத்திற்கு கொண்டு சென்று சகுந்தலா விட்டுள்ளார். 

ambulance, அவசர ஊர்தி,

இதனை கண்டு ஆத்திரமடைந்த சண்முகம் சதாசிவத்தின் இல்லத்திற்கு கொண்டு சென்று விட்டு வந்துள்ளார். இந்த நிலையில்., கடுமையான ஆத்திரம் அடைந்த சதாசிவம் தனது தாயாரை சாலையில் பரிதவிக்க விட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பத்தினர்., இவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுமட்டுமல்லாது அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சதாசிவம் மற்றும் சண்முகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ariyalur mother throughout road by sons and daughter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->