நேருக்கு நேர் மோதிய கார் - லாரி.. பரிதாபமாக பறிபோன உயிர்கள்.. ஜெயங்கொண்டத்தில் பெரும் சோகம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியை சார்ந்தவர் சுந்தரம் (வயது 80). இதே பகுதியை சார்ந்தவர் ராஜராஜன் (வயது 35). இவர்கள் இருவரும் உறவினர்களாக இருக்கும் நிலையில்., கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் பகுதிக்கு வேலைக்காக சென்றுள்ளனர். 

விருத்தாசலத்தில் வேலையை முடித்துவிட்டு பின்னர் மீண்டும் கும்பகோணத்திற்கு திரும்பியுள்ளார். இவர்கள் காரில் கும்பகோணத்திற்கு திரும்பி கொண்டு இருந்த நிலையில். காரை ராஜராஜன் இயக்கியுள்ளார். 

இந்த காரானது அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பகுதியில் வந்து கொண்டு இருந்த நிலையில்., எதிரே விருத்தாசலத்தை நோக்கி டிப்பர் லாரியொன்று வந்துள்ளது. இந்த இரண்டு வாகனங்களும் நொடிப்பொழுதில் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

accident, accident images,

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். 

இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ariyalur jeyamkondam car lorry accident man died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->