மாணவியை நாடக காதலால் ஏமாற்றி சீரழித்த காம கொடூரன்.! இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களேயே நடைபெற்று வருகிறது என்பதுதான் பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தைகூடத்தை சார்ந்தவர் பூங்குழலி (வயது 18) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் அங்குள்ள திருவையாறில் இருக்கும் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். 

இந்த சமயத்தில்., இவருக்கும் அங்குள்ள பகுதியை சார்ந்த அஜித்காந்த் (வயது 18) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும்., இருவரும் பன்னிரண்டாம் வகுப்பு ஒன்றாக பயின்றவர்கள் என்பதால் நட்பு ரீதியில் பழகி வந்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

sexual harassment,

இவர்களின் பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்த நிலையில்., அடிக்கடி சந்தித்து பேசும் வழக்கத்தை வைத்துள்ளனர். இந்த நிலையில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக செல்வியின் வீட்டில் யாரும் இல்லாததை காம கொடூரன் அறிந்துள்ளான்.

இதனையடுத்து அவரது இல்லத்திற்கு சென்று நாடக காதல் வார்த்தைகளை விட்டெறிந்து மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளான். இதற்கு பின்னர் மாணவியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளான். இது குறித்து அவனிடம் பல முறை மாணவி கேட்டும் பதில் கூறாமல் இருந்து வந்துள்ளான். 

தாம் ஏமாற்றப்பட்ட நிகழ்வை உணர்ந்த மாணவி அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கவே., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., அஜித்காந்தை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நாடக காதல் காம கொடூரனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ariyalur girl rapped by her boy friend using drama love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->