மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக நிர்வாகி.! மருத்துவமனையில் காத்திருந்த பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சிலம்பூர் கிராமத்தினை சார்ந்தவர் நாகராஜ். இவரது மனைவியின் பெயர் சிவசங்கரி (வயது 23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் ஆறு வயதுடைய சரண்ராஜ் என்ற மகனும் உள்ளார். 

இந்த நிலையில்., கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்த நிலையில்., சிவசங்கரி தனது மகனுடன் அங்குள்ள அகரம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும்., கணவரை பிரித்து வாழ்ந்து வந்த தருணத்தில்., கடுமையான மன உளைச்சலுக்கும் உள்ளாகி., பெரும் மனத்துயருடன் மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்துள்ளார். 

marriage, Indian marriage,

மனநல பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்து கொள்ள அவ்வப்போது மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றும் வந்துள்ளார். இந்த தருணத்தில்., அங்குள்ள ஆண்டிமடம் அதிமுக ஒன்றிய பொருளாளரான செல்வராஜ் (வயது 65) என்பவரின் முந்திரி தோட்டத்திற்கு சென்று., முந்திரி கொட்டைகளை பறிக்கும் பணிகளை சிவசங்கரி மேற்கொண்டு வந்துள்ளார்.      

இந்த தருணத்தில்., முந்திரி தோப்பில் பிற பணியாளர்கள் யாரும் இல்லாத நிலையில்., பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும்., இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன பெண் யாரிடமும் இது குறித்து கூறாமல் இருந்து வந்த நிலையில்., கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியும்., அவ்வப்போது மயக்கமடைந்தும் இருந்துள்ளார். 

sexual harassment, sexual abuse, sexual torture, பாலியல் வன்கொடுமை,

இந்த நிலையில்., பெண்ணின் பெற்றோர்கள் பெண்ணை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த நிலையில்., சிவசங்கரி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிவசங்கரியிடம் இது குறித்து கேட்ட சமயத்தில்., செல்வராஜின் சுயரூபம் வெளியே வந்துள்ளது. 

இதனை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளான சிவசங்கரியின் தாயார் அங்குள்ள மகளீர் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து., இவரது புகாரை ஏற்ற காவல் துரையினர் செலவராஜின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள துவங்கினர். இதனை அறிந்து கொண்ட செல்வராஜ் தலைமறைவாகவே., செல்வராஜை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்., சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ariyalur girl rapped by admk party member police investigation going on


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->