அரக்கோணம் ஏடிஎம் மையத்தில் இருந்து கட்டுக்கட்டாக வெளியான நோட்டுகள்.! ஆயிரம் பணமெடுக்க சென்ற நபருக்கு அடித்த ஜாக்பாட் அதிஷ்டம்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் நாம் பணம் எடுக்கும் சமயத்தில்., அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப்பட்ட பணத்தை பொறுத்து ரூ.100., ரூ.200., ரூ.500 மற்றும் ரூ.2000 வெளிவரும். இந்த நேரத்தில்., நாம் பதிவு செய்யும் பணத்தை பொறுத்து பணமானது வந்த பின்னர்., நமக்கு தேவையான பணத்தை பெற்று செல்வோம். 

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஏ.டி.எம் மையத்தில்., நேற்று வாடிக்கையாளர் ரூ.1000 பணம் எடுப்பதற்காக சென்ற சமயத்தில்., ரூ.1000 என்று பதிவு செய்து பொத்தானை அழுத்திய சமயத்தில்., அவருக்கு ரூ.5000 பணம் வந்துள்ளது. இதனையடுத்து கிடைத்த வரை இலாபம் என்ற நோக்கில்., அவர் பணத்தை எடுத்து சென்றுள்ளார். 

இந்த தகவலானது அங்குள்ள பகுதி மக்களுக்கு தெரியவரவே., சுமார் 50 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க ஏ.டி.எம் மையத்தில் குவிந்தத்தை அடுத்து., அடித்தது அதிஷ்டம் என்று கூறி பணத்தை மகிழ்ச்சியுடன் எடுத்து சென்றுள்ளனர். இந்த நிலையில்., இதனை கவனித்த சிலர் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., அங்கிருந்த பொதுமக்களை விரட்டியடித்து பின்னர் வங்கிக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்., ஆய்வு செய்து தற்காலிகமாக அந்த வங்கியில் இருந்து பணபரிவர்தனையை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in arakkonam atm release extra case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->