புயல் எச்சரிக்கையை மீறி பறந்த விமானம்.. 2 குழந்தை உட்பட 9 பேர் பரிதாப பலி.!!
in america flight crash peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் உலகம் முழுவதிலும் அரங்கேறும் பல்வேறு விபத்துகளால் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
அமெரிக்க நாட்டில் உள்ள தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் இருக்கும் தனியாருக்கு சொந்தமாக உள்ள "பிளாட்டஸ் பி.சி.12" இரகத்தினை சார்ந்த விமானமானது., அங்குள்ள சேம்பர்லைன் விமான நிலையத்தில் இருந்து 12 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
இந்த விமானமானது விமான நிலையத்தின் ஊடுதளத்தில் இருந்து விண்ணை நோக்கி உயர பறந்த நிலையில்., விமானம் சுமார் ஒரு மைல் தூரத்தினை கடந்து சென்றது. ஒரு மைல் தூரத்தினை கடந்த நிலையில் விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய விபத்தில் விமானி மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட சுமார் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும்., விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.
மேலும்., தற்போது விபத்து நடந்துள்ள பகுதியில் புயல் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருந்த நிலையில்., இவ்விபத்து அரங்கேறியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in america flight crash peoples died