மின்கோபுரத்தில் தூக்கில் தொங்கிய ஜோடி..! விசாரணையில் பகீர்..!! ஆரணியில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்துள்ள அரையாளம் காலனி பகுதியை சார்ந்தவர் பொன்னன் என்கிற சுதாகர் (வயது 38). இவரது மனைவியின் பெயர் உமா. இவர்கள் இருவருக்கும் நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். 

இந்த நிலையில்., இதே பகுதியை சார்ந்தவர் மூர்த்தி. இவர் பெயிண்டராக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் தேன்மொழி (வயது 40). இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில்., ஒரு மகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. 

பெயிண்டராக பணியாற்றி வந்த மூர்த்தி பணிக்காக சில சமயம் வெளியூர் சென்று வந்த நிலையில்., சுதாகருக்கும் - தேன்மொழிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

illegal affair, affair, couple enjoy,

கள்ளக்காதல் ஜோடிகள் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., வீட்டின் அருகேயுள்ள உயர்மின் கோபுரத்தில் தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில்., இவர்களின் உடலை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். 

பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். 

இதுமட்டுமல்லாது இவர்களின் கள்ளக்காதல் விபரம் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளதால்., இவர்கள் தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in aarani illegal affair couple attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->